Latest News :

’கபாலி’ லிங்கேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் ‘காலேஜ் ரோடு’! - பாராட்டிய பா.இரஞ்சித்
Monday March-21 2022

’கபாலி’ படத்தில் கோழிக்கறி என்று ரஜினிகாந்தை கலாய்க்கும் காட்சி மூலம் பிரபலமானவர் லிங்கேஷ். அப்படத்தை தொடர்ந்து ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தவர் ‘காலேஜ் ரோடு’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.

 

மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல், சமூக பிரச்சனைகள் பற்றி த்ரில்லர், காமெடி கலந்த கதையமைப்போடு உருவாகியுள்ள இப்படத்தை  எம்.பி.எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஜெய் அமர்சிங் இயக்கியிருக்கிறார்.

 

பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் பணியாற்றிய ஆப்ரோ இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

 

இந்த நிலையில், ‘காலேஜ் ரோடு’ படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், லிங்கேஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியதோடு, மாணவர்கள் கல்விக்கடன் மற்றும் அதன் அரசியலையும், சமூக பிரச்சனையையும் பேசினாலும் படம் கமர்ஷியலாக இருக்கிறது. நிச்சயம் மாணவர்களுக்கு படம் பிடிக்கும், என்று கூறியிருக்கிறார்.

 

இயக்குநர் பா.இரஞ்சித்தின் பாராட்டால் உற்சாகமடைந்துள்ள ‘காலேஜ் ரோடு’ படக்குழுவினர் வெளியீட்டுக்கான பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

Related News

8106

Watch Despicable Me 4 in theatres in English, Tamil, Hindi and Telugu on 5th July 2024!
Thursday July-04 2024

Ex-Supervillan, Gru is all set to create mayhem with Lucy, his adorable children, Margo, Edith and Agnes along with the newest addition, Gru Junior...

40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த ‘இந்தியன் 2’ விளம்பர பேனர்!
Thursday July-04 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும்  ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

டெட்பூல் & வால்வரின் புதிய அதிரடியான புரோமோ வெளியானது!
Thursday July-04 2024

டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது...