மாநாடு, மன்மத லீலை என்று அடுத்தடுத்த இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்காக நாக சைதன்யாவுடன் இணைகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
நாக சைதன்யாவின் 22 வது படமாக உருவாகும் இப்படம் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் 11 வது படமாகும். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கும் இப்படத்தை, பவன் குமார் வழங்குகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாக சைதன்யா அறிமுகமாகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்ற உள்ளனர்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படம் பற்றிய மற்ற விவரங்களை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.
திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...