‘தமிழ் படம் 2, ‘நான் சிரித்தால்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்வர்யா மேனன், தெலுங்கு சினிமாவிலும் பிஸியாகியிருக்கிறார்.
யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன், இளம் நடிகர் நிகில் நடிப்பில், இடி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி தெலுங்கு சினிமாவில் பிஸியாகியுள்ள ஐஸ்வர்யா மேனன், சில தமிழ்ப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அது பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்க இருக்கிறாராம்.
திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...