மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி அதை விட மிகப்பெரிய வசூலை பெற்ற திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்தி திரைப்படமான இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் டப் செய்து வெளியிடும் முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில், இதே குழுவினர் மேலும் இரண்டு திரைப்படங்களை உருவாக்க முடிவு செய்துள்ளனர். அந்த இரண்டு படங்களும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போல் உண்மை சம்பவங்களை மையமாக வைத்தே எடுக்கப்பட இருக்கிறதாம்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது.
இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட திரைக்கதை, ஆகியவை குறித்து இன்றும் போதுமான அளவில் விவாதங்கள் தொடர்கிறது. இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் நடிகை பல்லவி ஜோஷி ஆகியோர் இதன் மூன்று பாகங்களையும் நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
250 கோடி ரூபாய் வசூலித்து 'வசூல் கிளப்'பில் இணைந்திருக்கும் ' தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரையுலக வணிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டியிருக்கின்றனர். இதனால் இந்த கூட்டணியின் அடுத்த பட அறிவிப்பிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தேஜ் நாராயன் அகர்வால் வழங்க, அபிஷேக் அகர்வால், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கின்றனர். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி லட்டு விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, அது குறித்த கேள்விகளுக்கு திரை பிரபலங்கள் பதிலளிக்க மறுத்து எஸ்கேப் ஆகும் நிலையில், திரையில் திருப்பதி வெங்கடாஜலபதியாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம் பிடித்ததோடு, திருப்பதி தேவஸ்தானத்தால் யூத் சூப்பர் ஸ்டார் என்ற பெட்டம் பெற்ற நடிகர் ஆர்யன் ஷாம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்த தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்...
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக்கூடிய ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசிடாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான ‘தி பிக் ஷார்ட்ஸ் சாலஞ்’ (The Big Shorts Challenge) தமிழ் பதிப்பை அறிவித்துள்ளது...