லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ‘தி வாரியர்’ படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்ட திரைப்படமாகவும், பான் இந்தியா திரைப்படமாகவும் உருவாகி வருகிறது. அப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், ‘தி வாரியர்’ படத்தை தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிக்கும் மற்றொரு பான் இந்தியா திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. தெலுங்கு சினிமாவில் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கிய போயபத்தி ஸ்ரீனு இப்படத்தை இயக்குகிறார். இது அவருக்கு 10 வது திரைப்படமாகும்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் மூலம் ஸ்ரீனிவாசா சிட்தூரி தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘போயபத்தி ரபே’ (BoyapatiRAPO) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் பவன்குமார் தயாரிக்கும் 9 வது படமாகும்.
தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ராம் பொதினேனியும் ஒருவர். அவரது வசீகரம், நளினம் மற்றும் அசத்தல் நடிப்பால், அவர் தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். அவரது டப்பிங் படங்கள் யூடியூப்பில் பெரும் எண்ணிக்கையில் பார்வைகளை குவித்து சாதனை படைக்கின்றது. இந்த பிரமாண்டமான படம் ராம் பொதினேனியின் 20 வது படமாகும்.
இன்று ஐதராபாத்தில் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. இந்த துவக்க விழாவில் இயக்குநர்கள் லிங்குசாமி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.
இப்படம் குறித்து ஸ்ரீனிவாசா சிட்தூரி கூறுகையில், “போயபத்தி ஸ்ரீனுவின் இயக்கத்தில் இப்படத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 'தி வாரியர்' படத்திற்குப் பிறகு ராம் பொத்தினேனியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் மதிப்புமிக்க படமாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் உயர் தொழில்நுட்ப தரத்துடன் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கிறோம். படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம்.” என்றார்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...