நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில், அவரது அண்ணன் மகளும், பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், தேசிய விருது பெற்ற நடிகையுமான சுஹாசினி அரசியலுக்கு வரப்போகிறார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகை சுஹாசினியிடம், திரைத்துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டுவதில்லையே ஏன்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சுஹாசினி, ”ஜெயலலிதா ஆட்சிக்கு கீழ் குடிமக்களாய் இவ்வளவு நாள் இருந்துவிட்டு திரைப்படத் துறையில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வருவதில்லையா? என கேட்பது மோசமான கேள்வி.
கம்ஹாசனும், ரஜினிகாந்தும் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? ஏன் ராதிகாவும், ரேவதியும், பூர்ணிமாவும், நதியாவும், நானும் தான் அரசியலுக்கு வரலாம். இது அனைத்துமே மக்களிடம் தான் உள்ளது. மக்கள் விரும்பினால் நானும் அரசியலுக்கு வர ரெடியாகத்தான் இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...