குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக நடிகர் ஜெய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரானார்.
கடந்த 21 ஆம் தேதி நடிகர் ஜெய் மது அருந்திவிட்டு கார் ஓட்டினார், சென்னை அடையாறு மேம்பாலத்தில் கார் வந்த போது விபத்துக்குள்ளானது. இதில் ஜெய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அருகில் இருந்து போலீசார் ஜெய்யை மீட்ட போது, அவரால் நிற்க கூட முடியாத அளவுக்கு செம போதையில் இருந்ததாக கூறப்பட்டது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதோடு, வாகனத்தில் இன்சூரன்ஸ், ஆர்.சி புக் உள்ளிட்ட எதையும் ஜெய் வைத்திருக்கவில்லையாம். இது போதாது என்று ஏற்கனவே இது போல மது அருந்திவிட்டு இரண்டு முறை அபராதமும் கட்டியிருக்கிறாராம்.
இதனால் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு போட்டனர். இந்த வழக்கு விசாரணை நேற்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜெய் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார்.
காரியிலேயே அமர்ந்திருந்த ஜெய், பத்திரிகைகாரர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே, காரை விட்டு இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் நீதிமன்றத்திற்கு வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டதாம்.
இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதனால், நாளை ஜெய் மீண்டும் நீதிமன்றத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...