கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். கட்டுமான நிறுவன உரிமையாளரான இவருக்கும், நடிகர் சந்தானட்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம், சண்முகசுந்தரம் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அதுவே மோதலாக மாறியுள்ளது. இதில் சண்முகசுந்தரம் மீது சந்தானம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரத்த காயம் அடைந்த நிலையில் சண்முகசுந்தரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தானம், சண்முகசுந்தரம் இருவரும் விருகம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். சண்முகசுந்தரத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், நடிகர் சந்தானத்திடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளார்கள்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...