ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கோலிவுட்டின் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், தனது இரண்டாவது படமான ‘லவ் டுடே’ மூலம் நாயகனாக அறிமுகமாக திரைத்துறை மட்டும் இன்றி ரசிகர்களிடன் கவனத்தையும் ஈர்த்தார். இதனால், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படத்தின் துவக்க விழா பூஜையுடன் நடைபெற்றது. இதில், இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் லலித் குமார், இணைத் தயாரிப்பாளர் எல்.கே.விஷ்னு குமார் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டார்கள்.
இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர் விக்னேஷ் சிவனின் வித்தியாசமான திரைக்கதையில், இப்படம் அனைவரையும் கவரும் கமர்ஷியல் படமாக உருவாகிறது.
கலக்கலான காதல் காமெடிப் படங்களுக்கு பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் மற்ற மேலும் பல விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...