‘எதிர் நீச்சல்’, ‘வணக்கும் சென்னை’, ‘வை ராஜா வை’ என்று தொடர் படங்களை கொடுத்து வந்த பிரியா ஆனந்த், திடீரென்று சில மாதங்கள் காணாமல் போன நிலையில், சமீபத்தில் வெளியான ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தின் முழு வெளிச்சத்தையும் தன் மீது பட வைத்துள்ளார்.
“இனி நடிக்க கூடாது என்று இருந்த எனது முடிவு மாற்றும் வகையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதை இருந்தது” என்று பேட்டியில் பிரியா ஆனந்த் கூறியது, வெறும் வாய் வார்த்தை அல்ல, என்பதை அப்படமும், அப்படத்தில் பிரியா ஆனந்தின் கதாபாத்திரமும் நிரூபித்து விட்டது. தற்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை பார்ப்பவர்கள் பிரியா ஆனந்தை வாழ்த்த தவறுவதில்லை, அந்த அளவுக்கு தனது ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவருக்கு பாராட்டுக்களுடன் பட வாய்ப்புகளும் குவிந்து வருவதால், குஷியடைந்துள்ளவர் கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு, இது போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...