இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று அப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இப்படம் வித்தியாசமான களத்தில், மிகப்பெரிய ஆக்ஷன் கமர்ஷியல் ஜானர் திரைப்படமாக உருவாக உள்ளது. சமீபத்தில் தென்னிந்திய முழுக்க பிரபலமாகி இளைஞர்களின் கனவு கண்ணியாக திகழும் கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, அருண் வெஞ்சரமுத்து கலை இயக்குநராக பணியாற்றுகிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...