இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத்தின் கட்டட பணியை தொடங்குவதற்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தனது முகாம் அலுவலகத்தில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளிடம், சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக, சங்கத்துக்கு வைப்பு நிதியாக ரூ.1 கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் கூட்டாக உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை பெற்றுக் கொண்டார்கள்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...