‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சஞ்சனா நடராஜன், தனது நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் ‘போர்’ திரைப்படத்திற்காக காத்திருக்கிறார்.
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகை சஞ்சனா நடராஜனின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, ‘ஜிகர்தண்டா டபுல் எக்ஸ்’ படம் போல், இதிலும் அவர் தனது தனித்துவமான நடிப்பு மூலம் பாராட்டு பெறுவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
’போர்’ படத்தில் தான் நடித்திருக்கும் ரிஷிகா என்ற கதாபாத்திரம் பற்றி கூறிய நடிகை சஞ்சனா நடராஜன், “ரிஷிகா என்ற மருத்துவ மாணவியாக நடித்திருக்கிறேன். என் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அதேபோல தான் ரிஷிகா கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனால், இதில் நான் நடிக்காமல் நானாகவே இருந்தேன்.
நண்பர்களை சுற்றி சுழலும் இந்த கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள், அவர்களுடைய தற்போதைய வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதை விவரிக்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரசியல் பேசப்பட்டிருக்கிறது, சில சமூகப் பிரச்சனைகள் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு பணியாற்றினோம். இயக்குநர் பிஜாய் நம்பியார் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். இந்த படத்தில் எனது கதாபத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...