நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வரும் இயக்குநர் பா.இரஞ்சித், தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். குறிப்பாக தன்னிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றுபவர்களை தனது நிறுவனத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இயக்கும் படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பசுபதி, ஸ்ரீநாத் பாஸி, விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சபீர் உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்கள் படம் வெளியீட்டுக்குப் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக பேசுப்பொருளாகியுள்ளது...
கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது ’செகண்ட் சான்ஸ்’...
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’...