நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். ஜெயம் ரவியும் அவ்வபோது அவர்களை சந்தித்து உற்சாகமளித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ராஜா என்பவர், உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.
தனது ரசிகரின் திடீர் மரணம் பற்றி அறிந்த நடிகர் ஜெயம் ரவி, மறைந்த ராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் ‘தலைமைச் செயலகம்’...
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்திற்கு ‘பைசன் - காளமாடன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...
மூன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் ’ஆன்டி இண்டியன்’ படத்தை தயாரித்த ஆதம்பாவா, தற்போது இயக்குநர் அமீரை நாயகனாக வைத்து ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தை தயாரித்திருப்பதோடு, இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்...