பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, தற்போது ஓய்வில் இருந்தாலும், அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், அந்த தகவல்கள் குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருந்த ராஜமெளலி, தற்போது தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.
தனது அடுத்த படத்தை சமூக அக்கறையுடன் கூடிய படமாக இயக்கப் போவதாக தெரிவித்துள்ள ராஜமெளி, அப்படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்க இருப்பதாக கூறினார். ஆனால், இதில் நடிக்க கூடிய ஹீரோ மற்றும் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் யாரும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லையாம்.
அதேபோல், 2019 ஆம் ஆண்டின் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தெரிவித்த ராஜமெளலி, அப்படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...