பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் மீது ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்கச்செய்துள்ளது.
முதல் முறையாக பிரியதர்ஷன் இயக்கத்தில் உயதநிதி நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மலையால சினிமாவின் முன்னணி நடிகையான நமிதா பிரமோத், பார்வதி நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் இயக்குநர் மகேந்திரன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். விஜயின் ‘தெறி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மகேந்திரனுக்கு நடிக்க பல வாய்ப்புகள் வந்தும், அனைத்தையும் நிராகரித்தவர், இந்த படத்தில் பிரியதர்ஷன் அமைத்த கதாபாத்திரம் குறித்து கேட்டவுடன் ஓகே சொல்லியுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிப்பதோடு, படத்தின் வசனத்தையும் எழுவதால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தில் இயக்குநர் மகேந்திரனும் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.
தர்பூக நிவா இசையமைக்கும் இப்படத்திற்ஊ ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். மூன்லைட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தென் காசி அருகே நடந்து வருகிறது.
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்...
பாடலாசிரியர், நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்ட பா...
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நிறம் மாறும் உலகில்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...