விஜய் என்றாலே பிரச்சினை தான், என்ற ரீதியில் அவரது படங்களுக்கு தொடர் தொல்லைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தலைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்டிரைக் என்று அனைத்து பிரச்சினைகளும் தீந்த நிலையில், தற்போது விலங்கு நல வாரியத்தின் நோட்டீஸ் மற்றும் அனுமதி சான்றிதழ் குறித்து புது பிரச்சினை உருவாகியுள்ளது.
என்னதான் பிரச்சினை வந்தாலும், தீபாவளியன்று மெர்சல் கண்டிப்பாக வெளியாகும், என்று உறுதியாக ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கூறியதோடு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இதுவரை மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை, என்று தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் நோட்டிஸுக்கு பதில் அளித்துள்ள தணிக்கை வாரியம், மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை, என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலைய்ல், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் ‘மெர்சல்’ பட தயாரிப்பு தரப்பு பேரம் நடத்தி வருவதாக, வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...