Latest News :

விஜய்க்கு எதிராக சதி செய்யும் வெளிநாட்டு நிறுவனம்!
Sunday October-15 2017

விஜயின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு நிச்சயம் வெளியாகும் என்ற நிலை மாறி, ”வெளியாகும் ஆனா ஆகாது”, என்ற நிலைக்கு வந்துள்ளது.

 

உள்ளூர் பிரச்சினைகளை ஊதி தள்ளிய விஜய், தற்போது வெளிநாட்டு நிறுவனமான பீட்டாவின் சதியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

 

‘மெர்சல்’ படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, அது கிராபிக்ஸ் என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை, என்ற பிரச்சினையை வெளிநாட்டு நிறுவனமான பீட்டா கையில் எடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் தூண்டுதலின் பேரிலேயே ‘மெர்சல்’ படத்திற்கு எதிராக விலங்குகள் நலவாரியம் பிரச்சினையை எழுப்பியுள்ளது.

 

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் விஜய் பங்கேற்றதுடன், பீட்டாவுக்கு எதிராகவும் பேசினார். இதை மனதில் வைத்தே பீட்டா விஜய் படத்திற்கு எதிராக சதி செய்வதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க விஜய் இன்று முதல்வரை சந்தித்தாலும், இது மத்திய அரசு விவகாரம் என்பதால், நாளைக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், ‘மெர்சல்’ வெளியாவது கஷ்ட்டமே என்று கூறப்படுகிறது.

Related News

985

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery