‘கே.ஜி.எப்’, ‘சலார்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது அடுத்த படத்திற்காக நடிகர் என்.டி.ஆர் உடன் கைகோர்த்துள்ளார். இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர் நீல்’ என்று அழைக்கப்படுகிறது.
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கூட்டணியின் புதிய படம் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் தங்களது குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் சார்பில் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கொசராஜு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழாவின் போதே படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 2026 ஆம் ஆண்டு, ஜனவரி 9 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சலபதி கவனிக்கிறார்.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...