இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர்.அருளானந்து தயாரித்திருக்கும் படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’. அறிமுக நடிகர் ஏகன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக சகாய பிரிகிடா நாயகியாக நடித்துள்ளார். இவர்களிடன் யோகி பாபு, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ அதற்கு முன்பாக அமெரிக்காவில் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வோர்ல்டு ப்ரீமியர்’ பிரிவில் செப்டம்பர் 18 ஆம் தேதி, இரவு 8:00 மணிக்கு ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ திரையிடப்படுகிறது.
ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கடந்த 22 வருடங்களில் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...