May 25, 2022 04:55 AM

டி.ராஜேந்தரை வெளிநாடு அழைத்து செல்வது ஏன்? - நடிகர் சிலம்பரசன் விளக்கம்

டி.ராஜேந்தரை வெளிநாடு அழைத்து செல்வது ஏன்? - நடிகர் சிலம்பரசன் விளக்கம்

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதோடு, அவர் சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அவரது குடும்பத்தார் அழைத்து செல்ல இருப்பததாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், தனது தந்தையை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது ஏன்? என்ற கேள்விக்கு நடிகர் சிலம்பரசன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்,

 

எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தர வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். 

 

அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.