Jun 12, 2020 03:52 PM

15 ரூபாய் வாடகைக்கு நடிகர் சிவகுமார் இருந்த வீடு! - இதோ புகைப்படம்

15 ரூபாய் வாடகைக்கு நடிகர் சிவகுமார் இருந்த வீடு! - இதோ புகைப்படம்

1965 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான சிவகுமார், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்ததோடு, தமிழ் மொழியில் மட்டும் 190 படங்களில் நடித்திருக்கிறார். 

 

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் சிவகுமார், உடற்பயிற்சி, யோகா மற்றும் உணவு கட்டுப்பாட்டு மூலம், 78 வயதிலும் இளைஞர்களை போல சுறுசுறுப்பாக இருப்பவர். 

 

ஓவியக் கல்லூரி மாணவரான இவர், பல ஆண்டுகள் ஓவியத்துறையில் பணியாற்றிய பிறகே நடிப்பு துறைக்குள் நுழைந்தார். தற்போதும் தனது ஓவியங்கள் மூலம் வியக்க வைத்துக் கொண்டிருக்கும் சிவகுமார், ஓவியராக இருக்கும் போது டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களுக்கு சுற்றி ஓவியம் வரைந்ததாகவும், அதற்கு தனக்கு ரூ.7500 மட்டுமே செலவு ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

 

1958 - 1965 ஆண்டுகளில் 15 ரூபாய் வாடகைக்கு சென்னை புதுப்பேட்டையில் குடியிருந்த சிவகுமார், 7 ஆண்டுகள் அந்த வீட்டில் வாழ்ந்த போது தான் அவரது அத்தனை ஓவியங்களையும் வரைந்தாராம்.

 

”இப்படி குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள்” என்று தனது பழைய நினைவையும், தான் 15 ரூபாய் வாடகையில் இருந்த சென்னை புதுப்பேட்டை வீட்டையும் சிவகுமார் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

இதோ அந்த வீடு,

 

Actor Sivakumar