Feb 13, 2023 06:31 AM

பரபரப்பான சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் ‘துச்சாதனன்’!

பரபரப்பான சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் ‘துச்சாதனன்’!

தாய் திரையரங்கம் சார்பில் எஸ்.அருண் விக்னேஷ் மற்றும் ஆர்.வேல் முருகன் இணைந்து தயாரிக்கும் படம் ‘துச்சாதனன்’. இதில் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘அகிலா’, ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’, ‘ஒற்றாடல்’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை ரோகிணி நடிக்கிறார். இவர்களுடன் லொள்ளு சபா மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, சாய் ரோஹிணி, அருண் விக்னேஷ், மில்டன் மேடிசன், விக்னேஷ் வி.எஸ். சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள்.

 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி தளபதி இயக்கும் இப்படத்திற்கு பி.வி.பால முருகன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். வி.எஸ்.விக்னேஷ் படத்தொகுப்பு செய்ய, ராக்கி ராஜேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

 

இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் சென்னையில் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விகாஷ், நாயகி ரோகிணி, நடிகர் லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டார்கள்.

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் தளபதி, “படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு நகைக்கடையில் திருட்டு நடக்கிறது. அந்த திருட்டை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க காவல்துறை களம் இறங்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களை, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸான காட்சிகள் மூலம் பரபரப்பாக சொல்லியிருக்கிறோம்.

 

Dhuchathanan

 

பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை, மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன் தான். அதனால் தான் இந்த தலைப்பு வைத்துள்ளோம். முழுவதும் கிராமம் இல்லாம, நகரமும் இல்லாமல் சிறு டவுனில் கதை நடக்கிறது. அதனால் சத்தியமங்கலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மற்றும் இரண்டு சண்டைக்காட்சிகள் உள்ளது.” என்றார்.