Sep 13, 2024 10:14 PM

இயக்குநர்கள் சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி! - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறுதி

இயக்குநர்கள் சங்கத்திற்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி! - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உறுதி

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ‘வை ராஜா வை’, ‘லால் சலாம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் அவர் ‘சினிமா வீரன்’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

 

அந்த வகையில், முதற்கட்டமாக 2024 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் நேற்று (செப்.13) ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழங்கினார். இதனை, சங்க செயலாளர் பேரரசு, பொருளாளர் சரண், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

 

நிர்வாகிகள் இயக்குநர்கள் எழில், சி. ரங்கநாதன், மித்ரன் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.