Feb 24, 2025 10:06 AM

50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து வைத்த ‘தனம்’ குழுவினர்!

689f3dbc509518b88bf4e14daaf41887.jpg

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நெடுந்தொடர் ‘தனம்’. இந்த தொடரின் நாயகி ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிப்பதால், தொடரை விளம்பர நிகழ்ச்சியாக 50 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு ‘தனம்’ குழுவினர் விருந்து வைத்துள்ளனர்.

 

ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் புதுப்பெண், எதிர்பாரா விதமாக கணவனை இழந்த பின், அந்த மொத்தக் குடும்பத்தையும், ஆட்டோ ஓட்டி காப்பாற்றுகிறாள், மொத்தக் குடும்பத்தின் சுமைகளையும் தன் தோளில் சுமக்கிறாள். ஆட்டோ ஓட்டும் தனத்தை மையப்படுத்தி, இந்த சீரியலின் கதை பயணிக்கிறது. 

 

தனம் கதாப்பாத்திரத்திரத்தில் சத்யா நடிக்க,  ரூபஸ்ரீ, ஐஸ்வர்யா, விஜே கல்யாணி, கிஷோர், அர்ஜுன், ஜெயஸ்ரீ, ரேணுகா, கோகுல்,  சமிக்ஷா சொர்ணா, மதன், ரவிவர்மா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

 

ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களான நிஜ ஹீரோக்களை கௌரவப்படுத்தும் விதமாக,  தனம் சீரியல் குழுவினர் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு அறுசுவை விருந்தளித்து கொண்டாடினர். 

 

இந்நிகழ்வினில் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களும் இத்தொழிலுக்கு வந்த தங்களின் கதைகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் படக்குழுவினர் கலந்துதுரையாடி, சிறு சிறு விளையாட்டுக்கள் விளையாடி, அவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த மொத்த நிகழ்வும் மிக இனிமையான, மகிழ்வுடன் கூடிய கொண்டாட்டமாக அமைந்தது.