’சேயோன்’ பட படப்பிடிப்பை தொடங்கி வைத்த கமல்ஹாசன்

‘தாய் கிழவி’ மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இயக்குநர் சிவக்குமார் முருகேசன், இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 18) மதுரையில் தொடங்கியது. இதில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, படக்குழுவுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார். படத்தின் நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு பிரம்மாண்டமான தொடக்க விழாவாக இது அமைந்தது.

அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் கைகோர்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க மறுஇணைவாக அமைகிறது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படம், ஒரு வலிமையான படைப்புக் குழுவையும், ஈர்க்கக்கூடிய ஒரு கலைப்பார்வையையும் ஒன்றிணைக்கிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல் முறையாக, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் இணையும் படைப்பாக ‘சேயோன்’ திரைப்படம் அமைந்துள்ளதால், இத்திரைப்படத்தின் இசைக்கும், மொத்த திரைப்பட அனுபவத்திற்கும் பெரும் ஆவல் உள்ளதுடன், 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரையரங்கு வெளியீடுகளில் ஒன்றாகத் திகழ உள்ளது.

kamal hassan start seyon shootseyonsivakarthikeyantamil movie seyonகமல்ஹாசன்சிவகார்த்திகேயன்சேயோன் படப்பிடிப்பு தொடங்கியதுதமிழ்ப் படம் சேயோன்