மலையாள நடிகர்கள் பலர் சொகுசு கார் வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதை கேரள காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இதில் நடிகை அமலா பாலும் சிக்கினார். பாண்டிச்சேரில் உள்ள போலியான முகவரி ஒன்றை கொடுத்து அவர் சொகுசு கார் வாங்கிய விவாகரத்தில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் கேரளா மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரிதீவ்ராஜ், சொகுசு கார் வாங்கியதற்காக ரூ.50 லட்சத்தை வரியாக செலுத்தியுள்ளார்.
பெங்களூரில் உள்ள ஷோரூமில் இத்தாலி நாட்டு காரான லம்போகினி கார்ரை ரூ.2.13 கோடிக்கு பிரிதீவ்ராஜ் வாங்கியுள்ளார். இந்த கார் நேற்று முன் தினம் பிரீதீவ்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் எர்ணாகுளம் காக்கநாட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பதிவு செய்ய காரை கொண்டு வந்த அவர், வரியாக ரூ.43 லட்சத்து 14 ஆயிரத்து 500 - ஐ ரொக்கமாக செலுத்தினார்.
மேலும், தான் விரும்பிய பதிவு எண் கே.எல்.7 சி.எண்.1 என்ற எண்ணை அவர் கேட்டார். இதே பதிவு எண்ணை மேலும் 4 பேர் கேட்டனர். இதனால் ஆர்.டி.ஓ அந்த நம்பரை ஏலத்தில் விட, ரூ.7 லட்சம் கொடுத்து பிரீத்விராஜ் அந்த எண்ணை பெற்றார். இதனால் வெளிநாட்டு காரை வாங்கியதால் பிரீதிவிராஜ் கூடுதலாக மொத்தம் 50 லட்சம் ரூபாயை கேரள அரசுக்கு செலுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘குணா’ திரைப்படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையரங்குகளில் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
தெலுங்கு திரையுலகின் முன்னணி மாஸ் நாயகனான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்ன்யா தேஜா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது...
’சூர்யாஸ் சாட்டர்டே’ திரைப்படத்தை தொடர்ந்து நானி நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹிட் : கேஸ் 3’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...