ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘விஜய் 62’ என்று அழைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திரைத்துறை வேலை நிறுத்தத்தால் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, நிறுத்தப்பட்ட விஜய் படத்தின் படப்பிடிப்பு சிறப்பு அனுமதியோடு மீண்டும் சென்னையில் நடைபெற தொடங்கியது. இதற்கு தயாரிப்பாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், செட் போடப்பட்டு விட்டதால், 3 நாட்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்திக்கொள்வதற்காக சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. என்னதால் விளக்கம் அளித்தாலும், விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்ததற்கு நடிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதனால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் விஜய் ரசிகர்களை திடீரென்று சந்தித்துள்ளார். விஜய் படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு தளம் அருகே சூழ்ந்துக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை சந்தித்த விஜய், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும், என்று அறிவுரை கூறினாராம்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...