Take a fresh look at your lifestyle.

தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றிய பிக் பாஸ்!

11

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது சீசனை ஸ்டார் விஜய்யும் ஜியோஹாட்ஸ்டாரும் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி வரலாற்றிலேயே புதிய சாதனை படைக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட தொடக்க விழா அமைந்தது.

பிக் பாஸ் சீசன் 10-ன் தொடக்க நிகழ்ச்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 29 போட்டியாளர்கள் இல்லத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் நேரலை மேடையில் தங்களைப் பற்றிய அறிமுகத்தை ரசிகர்கள் முன் வழங்கினர். முற்றிலும் புதிய முயற்சியாக, போட்டியாளர்களின் அறிமுகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நேரலையில் பங்கேற்ற பார்வையாளர்கள் அவர்களின் தொடர் பயணத்தைத் தீர்மானித்தனர். இதன் விளைவாக, தொடக்க நாளிலேயே பல போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பொதுமக்களின் வாக்குகள் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கள் இடத்தை உறுதி செய்த 19 போட்டியாளர்கள்: அன்சார், முகேஷ், தான்யா, ராகவ், குமரன், சந்தினி, சவின்யா, வினோத், பாண்டியன், அவினாஷ், முத்தழகி, அஸ்வினி, பிரித்விநாத், ஜாவேத், லட்சுமி பிரியா மற்றும் ஷாதிகா. இவர்களுடன், ‘பிக் பாஸ்: தி காமன் மேன்’ என்ற மாநில அளவிலான போட்டியின் மூலம் தேர்வான ஜேசன், முனியம்மா மற்றும் ஷாமா ஆகிய மூன்று சாமானிய மக்களும் இணைகின்றனர். பிக் பாஸ் முதன்மை வீட்டில் பிரபலங்களுடன் சாமானிய மக்கள் இணைந்து போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
தொடக்க நாளிலேயே எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களுள் சாமானிய மக்களான ஆஷா, மணிகண்டன், சோபா, மணிவண்ணன் மற்றும் டார்வின் ஆகியோருடன் ஷப்னம், பிரசாந்த் ரிவியூவர், கவிதா, அக்ஷிதா, ராகவ், மாளவிகா, புவியரசன், எபி மற்றும் ரகு ஆகியோரும் அடங்குவர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9.30 மணிக்கு ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் கண்டு மகிழலாம். மேலும், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நேரலையாகக் காணலாம்.