உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.
புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், ”இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்” என்றார்.
நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன் புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.
தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை- கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு – அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்… காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் ..நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக… இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.

